இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
பாபர் அசாம் 101 ஓட்டங்களை பெற்றார்.
பதிலளித்த இலங்கை அணி 48 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணிசார்பில் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய ஷடாப் கான் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 2க்கு பூச்சியம் என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியுடன் இலங்கை அணி தொடர்ந்து 9, ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
பாபர் அசாம் 101 ஓட்டங்களை பெற்றார்.
பதிலளித்த இலங்கை அணி 48 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணிசார்பில் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய ஷடாப் கான் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 2க்கு பூச்சியம் என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியுடன் இலங்கை அணி தொடர்ந்து 9, ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.