இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.
இந்த போட்டி சார்ஜாவில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கிடையே முன்னதாக இடம்பெற்ற மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்ரவும், பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கானும் தமது முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த போட்டி சார்ஜாவில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கிடையே முன்னதாக இடம்பெற்ற மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்ரவும், பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கானும் தமது முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.