ரஞ்சி கிரிக்கட் தொடரில் டெல்லி மற்றும் உத்தர் பிரதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது.
இதன்போது மோட்டார் வாகனம் ஒன்றை அதன் சாரதி மைதானத்துக்குள் செலுத்தியுள்ளார்.
இதனால் போட்டி சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மைதானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லாததால் தாம் இவ்வாறு செய்ததாக குறித்த சாரதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டியில் இசாந்த் ஷர்மா, கௌத்தம் காம்பீர் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற முக்கிய வீரர்களும் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.