இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
மழை காரணமாக நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமும் முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 32.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாம் நாள் ஆட்டத்தில், 11.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 3 விக்கட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களை இந்திய அணி பெற்றிருந்தது.
இந்த நிலையில், ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் 21 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது.
நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது, இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சதீஸ்வர் புஜாரா ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும், ரித்திமன் ஷா ஆட்டமிழக்காமல் ஆறு ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் மூன்று விக்கட்டுக்களையும், தசுன் ஷானக்க இரண்டு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.