இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும், வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகத்தை வழங்கும் வகையிலான ஆடுகளங்களே தயார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு அதிக வாய்ப்பை வழங்கியது.
அதேபோன்று, நாக்பூர் மற்றும் டெல்லியின் மைதானங்களும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்பவே தயார் செய்யப்படும் என கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஜனவரி 5 ஆம் திகதி கேப்டவுனில் முதலாவது போட்டி ஆரம்பமாகவுள்ளது.
தென்னாபிரிக்க அணியில், வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் என்பதால், அதங்கு தயார்படுத்தல்களை மேற்கொள்ளும் வகையில், இலங்கை அணிக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும், வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகத்தை வழங்கும் வகையிலான ஆடுகளங்கள் தயார்ப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு அதிக வாய்ப்பை வழங்கியது.
அதேபோன்று, நாக்பூர் மற்றும் டெல்லியின் மைதானங்களும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்பவே தயார் செய்யப்படும் என கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஜனவரி 5 ஆம் திகதி கேப்டவுனில் முதலாவது போட்டி ஆரம்பமாகவுள்ளது.
தென்னாபிரிக்க அணியில், வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் என்பதால், அதங்கு தயார்படுத்தல்களை மேற்கொள்ளும் வகையில், இலங்கை அணிக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும், வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகத்தை வழங்கும் வகையிலான ஆடுகளங்கள் தயார்ப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது