இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்தியா அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லசித் மாலிங்க கடந்த காலங்களில் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்படாமை மற்றும் அவரின் வழமையான விளையாட்டுத் திறமைகளை வௌிப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு தேர்வு குழுவினர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் , இந்தியா அணியுடனான இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இலங்கை குழாம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இலங்கை அணிக்காக 68 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள லசித் இதுவரை 90 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
எவ்வாறாயினும் , லசித் மாலிங்க இறுதியாக விளையாடிய 10 ஓவர்களில் 21 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லசித் மாலிங்க கடந்த காலங்களில் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்படாமை மற்றும் அவரின் வழமையான விளையாட்டுத் திறமைகளை வௌிப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு தேர்வு குழுவினர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் , இந்தியா அணியுடனான இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இலங்கை குழாம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இலங்கை அணிக்காக 68 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள லசித் இதுவரை 90 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
எவ்வாறாயினும் , லசித் மாலிங்க இறுதியாக விளையாடிய 10 ஓவர்களில் 21 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.