இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்னும சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி , போட்டியின் நாயண சுழற்சியில் இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி , போட்டியின் நாயண சுழற்சியில் இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறும் இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்று 1க்கு 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.