சுற்றுலா இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 5ஆவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரையில் 07 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 104 ஓட்டங்கைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
தென்னாபிரிக்க அணி தமது முதலாவது இனிங்சிற்காக 335 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.
முன்னதாக இந்திய அணி தமது முதலாவது இனிங்சிற்காக 307 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை , நேற்று தனது இரண்டாவது இன்னிங்சிற்காக இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய லோகேஸ் ராஹூலுடன் தமிழில் உரையாடும் காணொளியொன்றது தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியுள்ளது.
குறித்த காணொளியில் "மச்சான் இந்த ஓவர் எல்லாமே உள்ளதான் போடுறான்: என முரளி விஜய் கூறுகிறார்.
குறித்த காணொளி கீழே....
போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரையில் 07 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 104 ஓட்டங்கைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
தென்னாபிரிக்க அணி தமது முதலாவது இனிங்சிற்காக 335 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.
முன்னதாக இந்திய அணி தமது முதலாவது இனிங்சிற்காக 307 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை , நேற்று தனது இரண்டாவது இன்னிங்சிற்காக இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய லோகேஸ் ராஹூலுடன் தமிழில் உரையாடும் காணொளியொன்றது தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியுள்ளது.
குறித்த காணொளியில் "மச்சான் இந்த ஓவர் எல்லாமே உள்ளதான் போடுறான்: என முரளி விஜய் கூறுகிறார்.
குறித்த காணொளி கீழே....