சுதந்திர கிண்ண 20க்கு 20 தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் அணி தகுதி பெற்றது.
இலங்கை அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் இறுதித் தருணத்தில் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பங்களாதேஷ் அணி பெற்றது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஆகக் கூடுதலாக குஷல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதையடுத்து, 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இறுதியில் இரண்டு பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெறவேண்டி இருந்தபோது, பங்களாதேஷ் அணியின், மொஹமட் மொஹமதுல்லா ஆறு ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள சுதந்திரக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ள உள்ளது.
எவ்வாறிருப்பினும், நேற்றைய போட்டியின் இரு அணிகளின் வீரர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது.
பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைபட்ட போது, போட்டியின் 19.2வது ஓவரில் வெளியிலிருந்த வந்த பங்களாதேஷ் வீரர் இலங்கை வீரரை சைகையால் ஏதோ திட்டியுள்ளார்.
இதனால், சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
மேலும், பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் மைதானத்தில் இருந்த பங்களாதேஷ் வீரர்களை வெளியேறுமாறு அழைத்தார்.
இதனால், நடுவர்கள், அவரை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து, மீண்டும் போட்டி தொடர்ந்தது.
இதில், 3வது பந்தில், 4 ஓட்டங்களும், 4வது பந்தில் 2 ஓட்டங்களும் எடுக்கப்பட்ட நிலையில், 5வது பந்தில் மஹமதுல்லா சிக்ஸ் அடிக்க பங்களாதேஷ் அணி 2 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேவேளை, பங்களாதேஷ் அணியினர் நடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தில், அவர்களின் ஓய்வறையின் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் வீரர்களின் இந்த செயல் கிரிக்கட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளதாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
rn rn
இலங்கை அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் இறுதித் தருணத்தில் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பங்களாதேஷ் அணி பெற்றது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஆகக் கூடுதலாக குஷல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதையடுத்து, 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இறுதியில் இரண்டு பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெறவேண்டி இருந்தபோது, பங்களாதேஷ் அணியின், மொஹமட் மொஹமதுல்லா ஆறு ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள சுதந்திரக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ள உள்ளது.
எவ்வாறிருப்பினும், நேற்றைய போட்டியின் இரு அணிகளின் வீரர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது.
பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைபட்ட போது, போட்டியின் 19.2வது ஓவரில் வெளியிலிருந்த வந்த பங்களாதேஷ் வீரர் இலங்கை வீரரை சைகையால் ஏதோ திட்டியுள்ளார்.
இதனால், சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
மேலும், பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் மைதானத்தில் இருந்த பங்களாதேஷ் வீரர்களை வெளியேறுமாறு அழைத்தார்.
இதனால், நடுவர்கள், அவரை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து, மீண்டும் போட்டி தொடர்ந்தது.
இதில், 3வது பந்தில், 4 ஓட்டங்களும், 4வது பந்தில் 2 ஓட்டங்களும் எடுக்கப்பட்ட நிலையில், 5வது பந்தில் மஹமதுல்லா சிக்ஸ் அடிக்க பங்களாதேஷ் அணி 2 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேவேளை, பங்களாதேஷ் அணியினர் நடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தில், அவர்களின் ஓய்வறையின் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் வீரர்களின் இந்த செயல் கிரிக்கட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளதாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
rn rn