நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அணி..!!

Saturday, 14 April 2018 - 8:35

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%21%21
2018 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 8வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்ட ரோயல் செலஞ்சஸ் பெங்குளுர் அணி 4 விக்கட்டுக்களால் பெற்றி பெற்றது.
 
போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.
 
துடுப்பாட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில், லோகேஷ் ராஹூல் 30 பந்துகளுக்கு 47 ஓட்டங்களையும், அணித்தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் 21 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
 
இதனை தொடர்ந்து பதிலளித்தாடிய, ரோயல் செலஞ்சஸ் பெங்குளுர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
 
துடுப்பாட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் 40 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.







Exclusive Clips