மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 20க்கு20 கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் ஐ.சீ.சீ உலக பதினொருவர் அணியில், இலங்கையின் திஸர பெரேரா இணைக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவை இதனை அறிவித்துள்ளது.
அவருடன் பாகிஸ்தானின் சஹிட் அஃப்ரிடி, சொஹைப் மாலிக் ஆகியோரும் இந்த அணியில் இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த 20க்கு20 கிரிக்கட் போட்டி, எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி, லோட்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு நிதித்திரட்டும் முகமாக இந்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
லாஹுரில் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கட் தொடருக்கான உலக பதினொருவர் அணியிலும் திஸர பெரேரா இணைக்கப்பட்டிருந்தார்.
மீண்டும் உலக பதினொருவர் அணியில் இணைக்கப்பட்டமை குறித்து தாம் பெருமையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவை இதனை அறிவித்துள்ளது.
அவருடன் பாகிஸ்தானின் சஹிட் அஃப்ரிடி, சொஹைப் மாலிக் ஆகியோரும் இந்த அணியில் இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த 20க்கு20 கிரிக்கட் போட்டி, எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி, லோட்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு நிதித்திரட்டும் முகமாக இந்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
லாஹுரில் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கட் தொடருக்கான உலக பதினொருவர் அணியிலும் திஸர பெரேரா இணைக்கப்பட்டிருந்தார்.
மீண்டும் உலக பதினொருவர் அணியில் இணைக்கப்பட்டமை குறித்து தாம் பெருமையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.