தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வொர்னர் கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலியாவின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், துணை தலைவர்; டேவிட் வொர்னர் மற்றும் பந்து வீச்சாளர் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில் ஸ்மித் மற்றும் வொர்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் அவுஸ்திரேலியாவின்; ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டனர்.
மேலும் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வொர்னருக்கு தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
பெரிய சர்ச்சைக்குள்ளான இந்த விடயத்தில், தாங்கள் பெற்ற தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மூவரும் அறிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது மக்களிடமும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடமும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் வொர்னர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார்.
சிட்னி நகரில் 10 மில்லியன் டொலர் செலவில் வொர்னர் ஒரு வீடு கட்டி வருகிறார்.
தற்போது இந்த வீட்டின் கட்டுமான பணிகளை வொர்னரும் இணைந்து செய்து வருகிறார்.
வொர்னரின் மனைவி கேண்டிஸ் வொர்னர், கட்டுமான பணிகள் செய்யும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலியாவின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், துணை தலைவர்; டேவிட் வொர்னர் மற்றும் பந்து வீச்சாளர் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில் ஸ்மித் மற்றும் வொர்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் அவுஸ்திரேலியாவின்; ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டனர்.
மேலும் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வொர்னருக்கு தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
பெரிய சர்ச்சைக்குள்ளான இந்த விடயத்தில், தாங்கள் பெற்ற தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மூவரும் அறிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது மக்களிடமும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடமும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் வொர்னர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார்.
சிட்னி நகரில் 10 மில்லியன் டொலர் செலவில் வொர்னர் ஒரு வீடு கட்டி வருகிறார்.
தற்போது இந்த வீட்டின் கட்டுமான பணிகளை வொர்னரும் இணைந்து செய்து வருகிறார்.
வொர்னரின் மனைவி கேண்டிஸ் வொர்னர், கட்டுமான பணிகள் செய்யும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.