11ஆவது ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன.
இன்றைய தினம் இடம்பெறும் இரண்டு போட்டிகள் ப்ளே ஓப் சுற்றுக்குத் தகுதி பெறும் இறுதி அணியை தீர்மானிக்கும் முக்கிய போட்டிகளாக அமைந்துள்ளன.
அதன்படி, 12 புள்ளிகளுடன் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் இன்றைய தினம் தமது இறுதிப் போட்டிகளில் விளையாடுகின்றன.
அதன்படி , மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை இடம்பெற்றது.
இந்த போட்டியில் டெல்லி அணி 12 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி , 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதன்படி , மும்பை இந்தியன்ஸ் இம்முறை ஐபிஎல் தொடரில் இருந்து வௌியேறியுள்ளது.
லீக் போட்டிகளின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வருகிறது.
இப்போட்டியில் , 54 ஓட்டங்களை விட அதிக ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிப்பெற்றால் மாத்திரமே ப்ளே ஒப் சுற்றுக்கு தகுதிப்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் இடம்பெறும் இரண்டு போட்டிகள் ப்ளே ஓப் சுற்றுக்குத் தகுதி பெறும் இறுதி அணியை தீர்மானிக்கும் முக்கிய போட்டிகளாக அமைந்துள்ளன.
அதன்படி, 12 புள்ளிகளுடன் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் இன்றைய தினம் தமது இறுதிப் போட்டிகளில் விளையாடுகின்றன.
அதன்படி , மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை இடம்பெற்றது.
இந்த போட்டியில் டெல்லி அணி 12 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி , 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதன்படி , மும்பை இந்தியன்ஸ் இம்முறை ஐபிஎல் தொடரில் இருந்து வௌியேறியுள்ளது.
லீக் போட்டிகளின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வருகிறது.
இப்போட்டியில் , 54 ஓட்டங்களை விட அதிக ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிப்பெற்றால் மாத்திரமே ப்ளே ஒப் சுற்றுக்கு தகுதிப்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.