ரஷ்யாவில் இடம்பெறும் உலகக் கிண்ண காற்பந்து தொடரில் நேற்றிரவு போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் அணிகளுக்கு இடையில் பீ பிரிவில் இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
போர்த்துக்கல் அணி சார்பில் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
இதேநேரம், ஸ்பெய்ன் அணி சார்பில் டீகோ கொஸ்டா 2 கோல்களையும், நாச்சோ ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும், 3க்கு 3 என்ற கோல் கணக்கில் இருந்த நிலையில், வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.
rnrn
முன்னதாக நேற்றிரவு இடம்பெற்ற மற்றுமொரு ஆட்டத்தில் 1க்கு 0 என்ற அடிப்படையில் மொராக்கோவை ஈரான் வீழ்த்தியிருந்தது.
இதேவேளை, இன்றைய தினம் ப்ரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா மற்றும் ஐஸ்லாந்து, பெரு மற்றும் டென்மார்க் முதலான அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதேநேரம், நேற்றைய போட்டியில் ஹெட்ரிக் கோலைப் பெற்ற போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வரி ஏய்ப்பு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 18.8 மில்லியன் யூரோ அபராதம் செலுத்தவும் விதிக்கப்பட்ட தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.