விம்பில்டன் டென்னிஸ் தொடரில் முன்னாள் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்திய ஏங்கலிக் கேர்பர், பட்டத்தை வென்றுள்ளார்.
குழந்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், விம்பில்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக செரீனா தகுதிப் பெற்றிருந்தார்.
அவரை எதிர்த்து விளையாடி ஜேர்மனியின் ஏங்கலிக் கேர்பர் 6-3 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இது அவரது முதலாவது விம்பில்டன் பட்டமாகும்.
இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு ஆண்டு விம்பில்டன் தொடரின் இறுதிப் போட்டியில் கேர்பர், செரீனாவிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.