இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.
இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.
முன்னதாக தென்னாபிரிக்கா அணி தமது முதல் இன்னிங்ஸில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் அணித் தலைவர் டு பிளசிஸ் 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுக்க, பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 5 விக்கட்டுக்களையும் தில்ருவன் பெரேரா 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்தநிலையில் இலங்கை அணி 365 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.
இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.
முன்னதாக தென்னாபிரிக்கா அணி தமது முதல் இன்னிங்ஸில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் அணித் தலைவர் டு பிளசிஸ் 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுக்க, பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 5 விக்கட்டுக்களையும் தில்ருவன் பெரேரா 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்தநிலையில் இலங்கை அணி 365 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.