இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் பென் ஸ்டொக்ஸ் (Ben Stokes) மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இரவு விடுதியில் முறைக்கேடாக நடத்துகொண்டதாக, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைக் கொண்டாட பென் ஸ்டோக்ஸ் தனது நண்பர் ஒருவருடன் இரவுநேர விடுதி ஒன்றுக்கு சென்று, அங்கு இளைஞர் ஒருவருடன் முரண்பட்டு மோதலில் ஈடுபட்டார்.
இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு, நிபந்தனையுடன் விடுதலையானார்.
அத்துடன், இங்கிலாந்து அணியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று பிரிஸ்டல் (Bristol) நகர நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது அவர் குற்றமற்றவர் என நீதிபதி அவரை விடுதலை செய்தார்.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இரவு விடுதியில் முறைக்கேடாக நடத்துகொண்டதாக, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைக் கொண்டாட பென் ஸ்டோக்ஸ் தனது நண்பர் ஒருவருடன் இரவுநேர விடுதி ஒன்றுக்கு சென்று, அங்கு இளைஞர் ஒருவருடன் முரண்பட்டு மோதலில் ஈடுபட்டார்.
இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு, நிபந்தனையுடன் விடுதலையானார்.
அத்துடன், இங்கிலாந்து அணியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று பிரிஸ்டல் (Bristol) நகர நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது அவர் குற்றமற்றவர் என நீதிபதி அவரை விடுதலை செய்தார்.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.