சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.
நொட்டிங்ஹாமில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரையில் 03 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 109 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணியின் ரிஷப் பாண்ட் டெஸ்ட் அறிமுகத்தை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.