தனது தீர்மானத்தால் வருந்துகிறேன் - தில்ஷான் (காணொளி)

Thursday, 20 September 2018 - 12:43

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
ஆசிய கிண்ணத் தொடரில் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணியினர் நேற்றிரவு தாயகம் திரும்பியிருந்தனர்.

வழமையாக விமான நிலையத்தில் இருந்து தமது வீடுகள் நோக்கி செல்லும் வீரர்கள் நேற்று முன்னணி தனியார் உணவகமொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை அழைத்திருந்தார்.

இதன் போது , ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்தித்த படுதோல்வி குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ,  சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தான் எடுத்த தீர்மானம் தொடர்பில் தற்போது வருத்தப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி சந்தித்த படுதோல்வி குறித்து ஹிரு செய்திச் சேவைக்குத் வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்தார்.


rnrnrn







Exclusive Clips