ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர்-4 சுற்றின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெற உள்ளன.
இதற்கமைய இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெறவுள்ள போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆசிய கிண்ணத் தொடரில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் நோக்குடன் இரண்டு அணிகளும் கடும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளன.
இதேநேரம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி அபுதாபியில் பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.