ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைமை பொறுப்பில் இருந்து நேற்று விலகினார்.
இது தொடர்பில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் தன்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்திந்த படுதோல்வியின் முழுப்பொறுப்பும் தன் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் , இந்த தோல்வியின் ஒரு பங்காளியே தான் என்றும் , அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என ஏஞ்சலோ மெத்திவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 5 வருடங்களாக இலங்கை அணியின் தலைவராக கடமையாற்றிய தான் கடந்த 2017ம் ஆண்டு பதவி விலகியதாகவும் , குறித்த காலப்பகுதியில் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் , தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுவின் கோரிக்கைக்கு அமைய ஒருநாள் மற்றும ்இருபதுக்கு இருபது அணித்தலைவராக மீண்டும் பொறுப்பேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , தான் அணிக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளதாக குறித்த கடிதத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் , அணிக்கு தகுதியற்றவர் என குறிப்பிடப்படுமிடத்து அணியில் இருந்து விலகவும் தயாராக உள்ளதாக ஏஞ்சலோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் தன்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்திந்த படுதோல்வியின் முழுப்பொறுப்பும் தன் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் , இந்த தோல்வியின் ஒரு பங்காளியே தான் என்றும் , அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என ஏஞ்சலோ மெத்திவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 5 வருடங்களாக இலங்கை அணியின் தலைவராக கடமையாற்றிய தான் கடந்த 2017ம் ஆண்டு பதவி விலகியதாகவும் , குறித்த காலப்பகுதியில் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் , தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுவின் கோரிக்கைக்கு அமைய ஒருநாள் மற்றும ்இருபதுக்கு இருபது அணித்தலைவராக மீண்டும் பொறுப்பேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , தான் அணிக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளதாக குறித்த கடிதத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் , அணிக்கு தகுதியற்றவர் என குறிப்பிடப்படுமிடத்து அணியில் இருந்து விலகவும் தயாராக உள்ளதாக ஏஞ்சலோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.