இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்று போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய இந்திய அணியும் 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை ஆசிய கிண்ண இறுதி போட்டிக்கு இந்திய அணி ஏலவே தெரிவாகியுள்ளது.
இந்தநிலையில் இரண்டாவது அணியை தெரிவு செய்யும் முக்கியமான போட்டி இன்று பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.