ஆசிய கிண்ண தொடரின் சுப்பர்-4 சுற்றின் 6வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அபுதாபியில் இடம்பெறவுள்ள, இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன
சுப்பர்-4 சுற்றில் இதுவரையில் இடம்பெற்று முடிவடைந்த போட்டிகளுக்கு அமைய, இந்திய அணி 5 புள்ளிகளுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சுப்பர்-4 சுற்றில் இதுவரையில் இடம்பெற்று முடிவடைந்த போட்டிகளுக்கு அமைய, இந்திய அணி 5 புள்ளிகளுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் மோதவுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளன.
இந்தநிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.