நேற்றைய போட்டியின் தோல்விக்கு பிரதான காரணம் இவர்தான்..! போட்டுடைத்த திக்வெல்ல (காணொளி)

Thursday, 18 October 2018 - 10:38

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2++%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
இலங்கையுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட் வித்தியாசத்தில் நேற்று வெற்றிப்பெற்றது.

இந்நிலையில, நேற்றைய போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் கலந்து கொண்டிருக்கவில்லை.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட உபதலைவர் நிரோஷன் திக்வெல்ல , சந்திமாலின் கண்ணில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், நடுத்தர வீரர்கள் பிரகாசிக்காமை காரணமாகவே நேற்றைய போட்டியில் தோல்வியை சந்தித்ததாக நிரோஷன் திக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான திசர பெரேராவின் திடீர் ஆட்டமிழப்பு அணியின் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்றைய போட்டி சீரற்ற காலநிலை காரணமாக 21 ஒவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இரவு 8 மணியளவில் ஆரம்பமானது .

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட் இழப்பிற்கு 150 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு வெற்றியிலக்கை அடைந்தது.












Exclusive Clips