இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
குவஹாடியில் (Guwahati ) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிம்ரொன் ஹெட்மியர் (Shimron hetmyer) 106 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்தநிலையில்,323 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 42.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 152 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
அணித்தலைவர் விராட் கோஹ்லி 140 ஓட்டங்களை பெற்றார்.
அம்பத்தி ராயுடு ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
குவஹாடியில் (Guwahati ) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிம்ரொன் ஹெட்மியர் (Shimron hetmyer) 106 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்தநிலையில்,323 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 42.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரோஹித் சர்மா 152 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
அணித்தலைவர் விராட் கோஹ்லி 140 ஓட்டங்களை பெற்றார்.
அம்பத்தி ராயுடு ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.