மலேசியாவில் இடம்பெற்றுவரும் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான காலிறுதி போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் வெற்றிபெற்றுள்ளார்.
முன்னாள் உலகச் சாம்பியனான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டே அவர் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
இந்த போட்டியை, சாய்னா நோவல் 21-18, 23-21 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில், அரையிறுதியில் அவர் ஒலிம்பிக் சாம்பியன் மரின் கரோலினாவை எதிர்கொள்ளவுள்ளார்
சாய்னா நோவல் ஐந்து போட்டிகளில் மரின் கரோலினாவை தோற்கடித்துள்ளபோதும், இறுதியாக இடம்பெற்ற 10 போட்டிகளில் பெரும்பாலானவற்றை மரின் கரோலின் வெற்றிபெற்றுள்ளார் என்பது விசேட அம்சமாகும்.