மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி

Sunday, 17 March 2019 - 13:10

+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியில் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைவதாக, ஸ்ரீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பந்து சுரண்டல் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 29ம் திகதியுடன் நிறைவடைகிறது.
 
இந்த நிலையில் அவர்கள் உடற்தகுதியை நிரூபித்தால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர்கள் உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமிலும் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரில் அவர்கள் இருவரும் கலந்துக் கொள்கின்ற நிலையில், அவர்களை அவுஸ்திரேலிய அணியில் இணைப்பது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 







Exclusive Clips