டெல்லி கெப்பிடல்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

Sunday, 21 April 2019 - 8:04

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளியத்தாடிய டெல்லி அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.

இதேவேளை, ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாக உள்ள 38 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

இரவு 8.00 மணிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டியாக இடம்பெறவுள்ளது.









Exclusive Clips