இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டெஸ்ட் தொடர் ஒன்றினை பாகிஸ்தானில் நடாத்துவது தொடர்பில் இரு நாடுகளும் திட்டமிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயலாளரான மொஹான் டி சில்வா உள்ளிட்ட குழுவினர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் இலங்கை குழுவினருக்கு கிடைத்த நேர்மறையான பின்னூட்டத்தின் அடிப்படையில் டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் குறித்த தொடரை டுபாயில் நடாத்த திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறித்த முடிவை எடுத்துள்ளது.
இருப்பினும், 2009 இல் இலங்கை அணி மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், எந்த நாடும் இதுவரை பாகிஸ்தானின் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயலாளரான மொஹான் டி சில்வா உள்ளிட்ட குழுவினர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் இலங்கை குழுவினருக்கு கிடைத்த நேர்மறையான பின்னூட்டத்தின் அடிப்படையில் டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் குறித்த தொடரை டுபாயில் நடாத்த திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறித்த முடிவை எடுத்துள்ளது.
இருப்பினும், 2009 இல் இலங்கை அணி மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், எந்த நாடும் இதுவரை பாகிஸ்தானின் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.