7 வது முறையாக நடைப்பெற்ற சர்வதேச ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் தொடரை வெற்றிகரமாக நிறைவுசெய்த இலங்கை 12 வயதுக்குட்பட்ட அணியினர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினர்.
குறித்த தொடர் கடந்த 16 ஆம் திகதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள சயிபஜயா மைதானத்தில் நடைப்பெற்றது.
அவுஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்த சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற நிலையில், இலங்கை அணி கட்டாய உடற்பயிற்சி பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
“ஜிம் டான்ஸ்” நடனப் பிரிவில் இலங்கையின் 12 வயதுக்குட்பட்ட அணி வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தொடர் கடந்த 16 ஆம் திகதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள சயிபஜயா மைதானத்தில் நடைப்பெற்றது.
அவுஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்த சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற நிலையில், இலங்கை அணி கட்டாய உடற்பயிற்சி பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
“ஜிம் டான்ஸ்” நடனப் பிரிவில் இலங்கையின் 12 வயதுக்குட்பட்ட அணி வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.