பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவின் சகல துறை வீரர் மிச்சல் மார்ஷ் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலிய கழகத்துக்காக விளையாடி வரும் அவர், பேர்த்தில் டாஸ்மானியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியொன்றில் ஆட்டமிழந்ததை அடுத்து, கோபத்தில் ஓய்வு அறையின் சுவரில் குத்தி கையில் காயப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.
அவரது காயத்தின் அளவு தீவிரமாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட மாட்டார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடர், நவம்பர் மாதம் 21ம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகிறது.
மேற்கு அவுஸ்திரேலிய கழகத்துக்காக விளையாடி வரும் அவர், பேர்த்தில் டாஸ்மானியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியொன்றில் ஆட்டமிழந்ததை அடுத்து, கோபத்தில் ஓய்வு அறையின் சுவரில் குத்தி கையில் காயப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அவர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.
அவரது காயத்தின் அளவு தீவிரமாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட மாட்டார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடர், நவம்பர் மாதம் 21ம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகிறது.