இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக, இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவியை வகிக்கக் கிடைப்பதையிட்டு பெருமையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்படைந்துள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அந்தஸ்த்தை, சீர்செய்வதற்கான வாய்ப்பாக இதனை கருதுவதாகவும் கங்குலி கூறியுள்ளார்.
47 வயதான கங்குலி தற்போது மேற்கு வங்கத்தின் கிரிக்கட் ஒழுங்கமைப்புக்கான தலைவராக உள்ளார்.
தாம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக பதவியேற்றதுடன், கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் நிதி நிலைமையை சீர் செய்யவே நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவியை வகிக்கக் கிடைப்பதையிட்டு பெருமையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்படைந்துள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அந்தஸ்த்தை, சீர்செய்வதற்கான வாய்ப்பாக இதனை கருதுவதாகவும் கங்குலி கூறியுள்ளார்.
47 வயதான கங்குலி தற்போது மேற்கு வங்கத்தின் கிரிக்கட் ஒழுங்கமைப்புக்கான தலைவராக உள்ளார்.
தாம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக பதவியேற்றதுடன், கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் நிதி நிலைமையை சீர் செய்யவே நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.