மயக்க மருந்து கொடுத்து நடிகை மீது வல்லுறவு

Thursday, 16 April 2015 - 12:47

%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81

பிக் பொஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மாடல் பூஜா மிஸ்ரா தனக்கு யாரோ குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டதாக ராஜஸ்தான் பொலிஸிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த மொடல் அழகியான பூஜா மிஸ்ரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

பொலிவுட் படங்கள் சிலவற்றில் குத்தாட்டம் போட்டுள்ளார். ஆனால் சல்மான் கான் நடத்திய பிக் பாக்ஸ் 5 ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். இந்நிலையில் பூஜா அண்மையில் தொழில் நிமித்தம் ராஜஸ்தான் சென்றுள்ளார்.

அங்கு அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். அந்த ஹோட்டலில் தங்கி அவர் போட்டோஷூட்டில் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு அவரை புகைப்படம் எடுத்த கலைஞர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் ஹோட்டலில் தான் குடித்த குளிர்பானத்தில் யாரோ மயக்க மருந்தை கலந்து கொடுத்ததாகவும் அதை குடித்துவிட்டு அறைக்கு சென்ற தான் மயங்கிவிட்டதாகவும் பூஜா தெரிவித்துள்ளார்.

காலையில் கண் விழித்தபோது தன்னை யாரோ பாலியல் வல்லுறவு செய்துவிட்டதைப் போன்று உணர்ந்ததாகவும், தனது பொருட்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் அவர் பொலிஸில்முறைப்பாடு செய்துள்ளார்.

சோனாக்ஷி சின்ஹா தனக்கு நேர்ந்த கதிக்கு பொலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, அவரது தாய் பூனம் சின்ஹா, இந்தி நடிகை இஷா கோபிகர் உள்ளிட்டோர் தான் காரணம் என பூஜா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதுள்ள பொறாமையாலும், தன்னுடன் நேருக்கு நேர் மோத துணிச்சல் இல்லாததாலும் சோனாக்ஷி இவ்வாறு செய்துவிட்டதாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகம் தனக்கு எதிராக சதி செய்து வருவதாக கூறுகிறார் பூஜா.

வழக்கு பூஜா அளித்துள்ள முறைப்பாட்டின் பேரில் உதய்பூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூஜா சோனாக்ஷி, இஷா தவிர மேலும் ஒரு பெரும் புள்ளியை பற்றியும் அவர் முறைப்பாடு செய்துள்ளதாகபொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் பொலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: இணையம்