அனுஷ்கா, விராத் காதல் முறியக் காரணம் இதுதான்!

Saturday, 20 February 2016 - 13:35

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%2C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21+

கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்தார். இந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கோலி–அனுஷ்கா சர்மா காதல் முறிந்துவிட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த காதல் முறிவுக்கு காரணம் என்ன என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது....

கோஹ்லி இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அனுஷ்கா சர்மாவிடம் தெரிவித்த போது, ‘எதில் ஹைமுஷ்சில்’ படம் தவிர வேறுபட வாய்ப்புகளை உடனே ஏற்க மாட்டேன் என்று அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.

இந்த நிலையில் சல்மான்கானுடன் ‘சுல்தான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்கா சர்மாவுக்கு வந்தது. அதை ஏற்க வேண்டாம் என்று கோஹ்லி கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தில் நடித்தே தீருவேன் என்று அனுஷ்கா சர்மா பிடிவாதமாக இருந்துள்ளார். காதல் முறிந்தாலும் பரவாயில்லை சல்மான்கானுடன் நடிப்பதற்குதான் முதல் இடம் என்று அனுஷ்கா சுல்தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார்.

இதனால் என்னைவிட சல்மான் படத்தில் நடிப்பது தானே உனக்கு முக்கியம் உன்னுடன் எனக்கு உறவு வேண்டாம் என்று கோலி தனது காதலுக்கு முற்றுப்புள்ளி  வைத்துவிட்டாராம்.