“விஜயை போல அதிர்வை ஏற்படுத்தினார் அதர்வா” ரஜினி பாராட்டு.

Saturday, 27 February 2016 - 11:15

%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E2%80%9D+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.
ரஜினி மற்றும் விஜய் அடுத்த படங்களை தயாரித்து வரும் கலைபுலி எஸ். தாணு தனது இந்த ஆண்டின் வசூல் வேட்டையை அதர்வா, கேத்தரீன் த்ரசா நடிப்பில் நாளை வெளியாக உள்ள ‘கணிதன்’ படத்திலிருந்து துவங்குகிறார்.

எ.ஆர். முருகதாஸ் துணை இயக்குனர், சந்தோஷ் டி.என் இயக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த படத்தை சமீபத்தில் பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், நடிகர் அதர்வாவை விஜயுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இதைப்பற்றி இயக்குநர் சந்தோஷ் டி.என் அளித்த பேட்டியில் “கணிதன் சிறப்பு காட்சி, ரஜினி சார் வீட்டில் திரையிடப்பட்டது.

இடைவெளி இல்லாமல் படத்தை பார்த்த ரஜினி சார், சுமார் 30 நிமிடம் தாணு சாரிடம் உரையாடினார்.
 
படக்குழுவினர் அனைவரையும் பாராட்டிய ரஜினி சார், இது முதல் படம் இயக்குநர் எடுத்த படம் போல தோன்றவில்லை என என்னை பாராட்டினார்.

ரஜினி சார் படங்களை பார்த்து வளர்ந்த ஒரு பையனுக்கு இதற்கு மேல் என்ன பாராட்டு வேண்டியிருக்கிறது..
 
மேலும் படத்தின் நாயகன் அதர்வாவை, திரையில் விஜய்யை பார்த்தது போல் இருந்தது. அப்படி ஒரு அதிர்வை அதர்வா இந்த படத்தில் கொண்டுவந்துள்ளார் என பாராட்டினார் ரஜினி சார்” இவ்வாறு சந்தோஷ் கூறினார்.