யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.
தற்போது யாழ்ப்பாண மாவட்டம் வழமைக்கு திரும்பி வரும் நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தையும் இன்றைய தினம் மீள திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில் 70 நாட்களின் பின்னர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை நடவடிக்கைகள் சுகாதார முறைமைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.