உலகலாவிய ரீதியாக சிறந்த துடுப்பாட்ட வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி திகழ்வதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வே கிரிக்கட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் பொம்மி மென்குவா உடன் இடம்பெற்ற நேரடி கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களில் அவுஸ்திரேலி அணியின் வீரர் நாதன் லயோன் சர்வதேச ரீதியாக சிறந்தவர் என கருத முடியும்.
கடந்த சில வருடங்களாக அவரின் லாவகமான பந்து வீச்சை அவதானித்ததன் போது தாம் இந்த இந்த முடிவக்கு வந்ததாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இதேபோல் வேகபந்து வீச்சாளர்கள் வரிசையில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் என்டசன் விசேட தன்மையை கொண்டிருப்பதுடன் எந்த தருணத்திலும் அதற்கு ஏற்ற வகையில் அவரினால் செயல்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தற்போது விராட் கோலியா அல்லது சச்சின் டெண்டுல்காரா சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற வாதபிரதிவாதங்கள் கிரிக்கட் அபிமானிகளுக்கு இடையே உள்ள போதிலும், பெரும்பாலானவர்கள் தற்போது விராட் கோலியே சிறந்த துடுப்பாட்ட வீரர் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை பெற்றுள்ளதுடன் விராட் கோலி இதுவரை 70 சதங்களையே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.