உக்ரைனில் உள்ள முன்னணி கால்பந்து அணி ஒன்றின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பயிற்சிகளை குறித்த காற்பந்து அணியினர் மீண்டும் முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த காற்பந்து அணியின் 65 பேரிடம் மேற்கொண்ட கொரோனா தொற்றுக்கான சோதனையில் 25 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து உக்ரைனில் உள்ள குறித்த முன்னணி காற்பந்து அணியின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.