சர்வதேச கிரிக்கட் பேரவையின் விசேட கலந்துரையாடல்

Thursday, 25 June 2020 - 13:03

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
 
சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் நிறைவடையவுள்ளது.
 
இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான திகதி மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை அறிவிப்பது குறித்து சர்வதேச கிரிக்கட் சபையின் உறுப்பினர்களுக்கு இடையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடப்படவுள்ளது.
 
சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி பெயர் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.