நடிகை நயன்தாராக்கும், அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுக்கும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் குறித்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது என இருவரும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சினிமா பிரபலங்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன் காரணமாக இருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிப்பதாகவும் குறித்த செய்தியில் .
இந்நிலையில், இந்த செய்திகள் உண்மையில்லை என இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தாங்கள் இருவரும் நலமாக இப்பதாக கூறிள்ள அவர், தான் படத்திற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், நயன்தாரா, உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகைள செய்து வருவதாகவும் கூறி
அனைத்து வதந்திகளுக்கும் விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.