வீதியில் நடந்துச் சென்ற போது கர்ப்பிணிப் பெண்ணொருவர் திடீரென குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
சூசன் அண்டர்சன் மற்றும் ஜோசப் என்ற தம்பதியினருக்கே குறித்த குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையை பெற்றெடுப்பதற்காக குறித்த தம்பதிகள் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு திடீரென அவர்களுக்கு குழந்தைப் பிறந்துள்ளது.