எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச நிறுவனங்கள், சபைகள் மற்றும் சட்ட ரீதியான அமைப்புக்களில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் எவரும் அரசியலில் ஈடுபட கூடாது எனவும் ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.