ஊவா ப்றீமியர் லீக் 20க்கு20 போட்டி தொடர்பில் தாங்கள் அறியவில்லை என்றும் அதற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிரிக்கட் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் குறிப்பிட்டுள்ளது.
கிரிக்கட் நிறுவனத்தின் பெயர் தேவையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.