மியன்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவமானது கச்சின் மாநிலத்தின் ஹபகாந் பகுதியிலுள்ள உள்ள ஜேட் சுரங்கத்தில் நேற்று (02) ஏற்பட்டது.
தேடுதல் பணிகளில் அந்நாட்டு தீயணைப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.