இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சேம் கரன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேறிகிந்திய தீவுகளுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் நிலையில் அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக என்பதை கண்டறியும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கான முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.