நாவலப்பிட்டி-தலவாக்கலை பிரதான வீதியின் நாவலப்பிட்டி பொது மருத்துவமனைக்கு அருகில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக நாவலப்பிட்டி பகுதிக்கு நீர் வழங்கும் குழாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதிக்கு நீர் வழங்கும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.