கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ள வர்த்தகர்களுக்கு இலகு கடனாக 58 பில்லியன் ரூபாவினை வழங்கும் திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இதுதவிர இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் காலவரையரையின்றி நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 2 வரையிலான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 240 வர்த்தக நிறுவனங்களுக்கு 52 பில்லியன் ரூபாவினை வழங்குவதற்கான அனுமதி மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி நிறைவடைந்த முதலாவது கட்டத்தின் போது 28 பில்லியன் ரூபாய் 13 ஆயிரத்து 926 வர்த்தகர்களுக்கு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.