மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டுதலுக்கு அமைவாக மேல்மாகாணத்தில் ஊழல் விசாரணை காரியாலயத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படட விசேட சோதனை நடவடிக்கைகளில் 57 சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 9 பெண்களும் 48 ஆண்களும் உள்ளடங்குவதோடு மோசடி செய்தல், ஏமாற்றி பணம் பறித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல், பல திருமணங்கள் செய்தல் உள்ளிட்ட 70 குற்றங்களின் கீழ் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 9 பெண்களும் 48 ஆண்களும் உள்ளடங்குவதோடு மோசடி செய்தல், ஏமாற்றி பணம் பறித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல், பல திருமணங்கள் செய்தல் உள்ளிட்ட 70 குற்றங்களின் கீழ் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் கைது செய்ததன் மூலம் எதிர்காலத்தில் சுமார் 1 கோடியே 84 இலட்சம் (108,470,356) ரூபா மோசடி முறியடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் அனைவரும் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் அனைவரும் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.