முதலையினால் உயிரிழந்த சிறுமி

Thursday, 16 July 2020 - 10:41

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF
தாயுடன் நீராடச் சென்ற சிறுமியை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று மீகலேவ - யாய பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் முதலையினால் இழுத்து செல்லப்பட்ட சிறுமி பிரதேச மக்களினால் மீட்கப்பட்டு  தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமி மூன்றரை வயது என்பதுடன் உஸ்கல - சியம்லன்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.