ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவரின் வங்கி கணக்கில் 18 கோடி ரூபாய் பரிமாற்றம்..!

Monday, 10 August 2020 - 17:12

%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+18+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..%21
ஹோகந்தர - சிங்கபுர பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஒருவரின் வங்கி கணக்கில் ஒரு வருட காலப்பகுதியினுள் 18 கோடி ரூபாய் பணம் பரிமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

25 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தலங்கம காவல்துறையின் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

37 வயதான சந்தேகநபர் நாளைய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.